குடியரசுத் தலைவரின் மகளுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கி இருப்பது சம்பந்தமாக
நாளிதழில் வந்துள்ள செய்தியை தான் மேலே பார்க்கிறீர்கள் !-
1) குடியரசுத்தலைவரின் மகளுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகர் அருகே
இருபது ஏக்கர் நிலம் மலிவு விலையில் -
2) 32,000 சதுர அடி நிலம் விளையாட்டு மைதானத்துக்காக் 30 ஆண்டுக்காலத்துக்கு
குத்தகைக்கு -
3) இதற்கான வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுக்கு ஒரு (!) ரூபாய் மட்டுமே !
4) இதே போல் 27,300 சதுர அடி நிலம் ஆரம்பப்பள்ளி மற்றும் விடுதி
கட்டுவதற்காக இலவசமாகவே அளிக்கப்பட்டு உள்ளது !
14 வயது வரை அனைவருக்கும் இலவசமாக கட்டாய கல்வி அளிப்பது நமது
அரசியல் சட்டத்தின்படி அண்மையில் பாராளுமன்றததின் மூலம் உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இந்த நிலையில் தனியார் ஒருவருக்கு ( அதுவும் குடியரசுத்தலைவரின்
மகளுக்கு ) சொந்தமாக ஆரம்பப்பள்ளி ஆரம்பிப்பதற்கு எதற்காக அரசு இலவசமாக
நிலம் அளிக்க வேண்டும் ?
யார் கேட்பது இந்தக் கொள்ளையைப்பற்றி – இத்தனைக்கும் இது ஒரு
ஜனநாயக நாடு - இதில் 800 கட்சிகள் வேறு !!!
No comments:
Post a Comment