எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று பகவத் கீதையில் இருக்கிறது என்று சொல்வார்கள். இதோ காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும், அதன் பிரதமரும் கீதையின் படி நடந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.
ஊழல் கண்காணிப்பு தலைவர் பதவிக்கு தாமஸ் அவர்களைத் தேர்வு செய்ய, எதிர்கட்சியின் சுஷ்மா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதைக் கண்டு கொள்ளாமலே பிரதமர் நடந்து கொண்டதும், உச்ச நீதிமன்றத்தில் தாமஸ் மீது இருக்கும் வழக்கு பற்றி தெரியாது என்று அறிக்கை கொடுத்ததும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தாமஸ்ஸின் நியமனம் இல்லீகலானது என்று சொல்லி விட்டது.
தாமஸ்ஸூக்கு ஏன் இப்படி காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்கி, சட்டங்களையும், நடைமுறைகளையும் மீறி அவரைப் பதவியில் உட்கார வைத்தது என்பது ஒரு கேள்வி. அதற்கான விடையை திரு பிரதமர் தான் விளக்க வேண்டும். அவர் அதை எப்போதும் சரியான நேரத்தில் செய்வாரா என்பதும் ஒரு கேள்வி. இப்படியே எழுந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தான் என்ன? அதுவும் ஒரு கேள்வி…
இந்தியாவை பன்னாட்டு அளவில் தலை குனிய வைத்த பெருமை திமுகவிற்கும், காங்கிரஸ்ஸூக்கும் உண்டு. எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யத் துணியாத ஒன்றை திமுக அமைச்சர் செய்திருக்கிறார். அதனை கண்டும் காணாமல் இருந்தார் பிரதமர். இன்றைக்கு நார் நாராய் கிழிக்கின்றார்கள். ஆனால் நான் நல்லவன் என்கிறார் பிரதமர்.
ஆனால் எந்த தலைகுனிவும், அழிவும் நடந்தாலும் அமைதியாய் இருக்கும் பிரதமர் கீதை வழியில் நடக்கிறார் என்கிற சந்தோஷமே நமக்குப் போதும். எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் அமைதியாய் இருப்போம் என்கிற பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் இந்தியா ஒரு ஆன்மீக நாடு அல்லவா?
thx:velichathil.wordpress.com
No comments:
Post a Comment